வெள்ளி, 17 செப்டம்பர், 2010

நிழல்பிரதிகள்



அதனை
முதலில் சந்தேகிக்கிறோம்

கழுகின் கண்களில் பார்க்கிறோம்
கதவு திறந்து விடுகிறோம்
எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்
எத்தனையோ நடந்துவிட்டது என்று, அதற்காக
எதைஎதையோ செய்கிறோம்
எத,எதற்க்கோ உடன் படுகிறோம்
 இறுதியில்
தளர்ந்த மூச்சை விடுகிறோம்
பிறகு
அதன் நிழல்பிரதிகளாய் மாறுகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக