திங்கள், 18 அக்டோபர், 2010

உயிர்மையில்எனதுகவிதை 3



முடிவற்ற இரவு தொடங்குகிறது






கிளர்வூட் டிய தனிமை



மறைவிடங்களைத் தேடுகிறது







நன்நடத்தை



அவசரகதியில் பலவீனமடைகிறது



தினருசி



ஒருபுதியஇரையை சுவைக்கிறது



பிறகு



குற்றஉணர்ச்சியில் வெட்கித்தலைகுனிகிறது



எல்லாம் சரிசெய்யப்பட்டுவிட்டவிடியலில்



ஜன்னலிருந்து கதவிற்க்கும்



கட்டிலிருந்து பின்வாசலுக்கும்



ஒரு பொய்யின்சித்திரத்தை வரைகிறது

2 கருத்துகள்: