புதன், 6 அக்டோபர், 2010

யுகமாயினிஇதழில் வெளியானஎனதுகவிதை

அகதி

யாருமற்ற வெளியில்


மரங்கள் மண்ணிலிருந்து

இடம் பெயர்ந்து கொள்கின்றன

நாளை மரத்திற்க்கு இலக்கமிட்ட மனிதனும்

கூடு தேடி வரும் பறவைகளும் மனம் பிறழக்கூடும்

வேர்களில் ஒட்டியிருந்த

பிறந்த மண்ணை உதிர்த்தபடி

ஒருமரம் ரகசியமாய் புலம் பெயருகிறது

2 கருத்துகள்: